ADDED : ஜூலை 02, 2024 11:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் அடுத்த கீரைப்பட்டியில், நொரம்பு மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி, நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு கீரைப்பட்டி வி.ஏ.ஓ., சிவக்குமார் கிராம உதவியாளர் தங்கமணியுடன், விஜய் என்பவரின் விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்கு அனுமதியின்றி பொக்லைன் மூலம், டிப்பர் லாரியில் நொரம்பு மண் ஏற்றிக் கொண்டிருந்த மாவேரிப்பட்டியை சேர்ந்த டிரைவர் ஹரிஷ், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர்.