ADDED : மார் 06, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், ஹரி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர், 60. கடந்த இரு நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு மனைவியுடன் சென்றவர், நேற்று மாலை, ஊர் திரும்பினார்.
அவர் வீட்டின் முன்-பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், வீட்-டிற்குள் பீரோவை உடைத்து, 8 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.