/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 பவுன் நகை திருட்டில்3 பேர் கைது; 30 பவுன் மீட்பு
/
100 பவுன் நகை திருட்டில்3 பேர் கைது; 30 பவுன் மீட்பு
100 பவுன் நகை திருட்டில்3 பேர் கைது; 30 பவுன் மீட்பு
100 பவுன் நகை திருட்டில்3 பேர் கைது; 30 பவுன் மீட்பு
ADDED : மார் 20, 2025 01:25 AM
100 பவுன் நகை திருட்டில்3 பேர் கைது; 30 பவுன் மீட்பு
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே, சேலம்- - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், புறவடை பிரிவு சாலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை ஷேர்லின்பெல்மா, 44 என்பவர் அவரது தாயாருடன் வசிக்கிறார். கடந்த, 8- அன்று ஆசிரியை வீட்டை பூட்டி விட்டு, பள்ளிக்கு சென்றார். இதை நோட்டமிட்ட ஒரு திருட்டு கும்பல், அன்று பட்டப்பகலில் ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து, பிரோவில் இருந்த, 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. அதியமான்கோட்டை போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளி களை தேடி வந்தனர். இந்த திருட்டில் ஈடுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், 34, துர்காநம்பி, 25, கார்த்திக், 25 என, 3 பேரை அதியமான்கோட்டை போலீசார் நேற்று கைது செய்து, அவர்
களிடமிருந்து, 30 பவுன் நகை மற்றும் ஹோண்டா கார், பட்டாக்கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைதான, 3 பேர் மீதும், திருட்டு, கொலை முயற்சி, பி.சி.ஆர்., ஆக்ட், குண்டாஸ் உட்பட, 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.