/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா
/
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா
அகத்தீஸ்வர சுவாமி கோவிலில் 14ம் ஆண்டு குரு பூஜை விழா
ADDED : டிச 20, 2024 12:50 AM
கிருஷ்ணகிரி, டிச. 20-
கிருஷ்ணகிரி அடுத்த எம்.சி.,பள்ளியிலுள்ள ஆனந்தவல்லி அம்பிகா சமேத அகத்தீஸ்வர சுவாமி கோவிலில், 14ம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு, கொடியேற்றம், மாலை, 6:00 மணிக்கு, ருத்ரயாகம் மற்றும் சுவாமி உற்சவம், அகத்தியர் கைலாய வாத்தியம், செண்ட மேளம் மற்றும் வாணவேடிக்கை ஆகியவை நடந்தது.
நேற்று காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, 10:00 மணிக்கு, ஸ்ரீமத் அகத்தியனுக்கு பக்தர்களின் கைகளால் அபிஷேகம், சங்காபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு, அகத்தீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம், மகேஸ்வர பூஜை, மகா தீபாராதனை, சாதுக்களுக்கு அன்னம் வழங்கல் ஆகியவை நடந்தது. மதியம், 3:00 மணிக்கு, சாதுக்களுக்கு வஸ்திரதானம் மற்றும் தட்சணை வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சாதுக்களும் பங்கேற்றனர்.