/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.15.68 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.15.68 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : மார் 19, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.15.68 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்
தர்மபுரி:தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று நடந்த தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். நேற்று முன்தினம், 36 பேர் வந்த நிலையில், நேற்று, 38 விவசாயிகள் ஏலத்திற்கு வந்திருந்தனர். இவர்கள், 75 குவியல்களாக, 2,522 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 362 முதல், 701 ரூபாய் வரை சராசரியாக, 618 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 15.68 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த ஏலத்தால் அரசுக்கு, 23,516 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.