/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 16 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் லாட்டரி விற்ற 16 பேர் கைது
ADDED : டிச 27, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், டிச. 27-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அதன்படி பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற வேப்பனப்பள்ளி பயாஷ் பாஷா, 55, பூசாரிப்பட்டி கனகராஜ், 38, அத்திமுகம் ராஜகோபால், 67, தோரிப்பள்ளி அசோக், 45 ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல லாட்டரி சீட்டுகள் விற்ற ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, பாரூர், ராயக்கோட்டை, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர், பாகலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 12 பேரை போலீசார் கைது செய்தனர்.