நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அனுமேப்பள்ளியில் தங்கி, தனியார் ஓட்டலில் வேலை செய்தார். கடந்த, 14ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, ஓட்டலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
அவரது உறவினர் தமிழ்செல்வன், 39, புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.ஓசூர், நல்லுார் அக்ரஹாரத்தை சேர்ந்தவர், 14 வயது சிறுவன்; பேடரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்; கடந்த, 13ம் தேதி பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் மாணவன் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. இதனால் விரக்தியடைந்த மாணவன் கடந்த, 15ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, பள்ளியிலிருந்து சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது தந்தை புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.

