ADDED : நவ 24, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிலாளி உட்பட
2 பேர் மாயம்
ஓசூர், நவ. 24-
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. கடந்த, 20 காலை, 6:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர். அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே என்.புதுாரை சேர்ந்தவர் நாகராஜ், 32. கூலித்தொழிலாளி; இவர் தனது மனைவி மலர், 29, என்பவருடன் சித்தாண்டபுரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். குடும்ப தகராறு காரணமாக அங்கிருந்து கடந்த, 19 இரவு, 11:00 மணிக்கு வெளியே சென்ற நாகராஜ் திரும்பி வரவில்லை.
அவரது மனைவி மலர் கொடுத்த புகார்படி, அஞ்செட்டி போலீசார் தேடி வருகின்றனர்.