/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
/
வெவ்வேறு விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
ADDED : டிச 12, 2025 05:23 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி, பீ.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் செவத்தான்,75; நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி செல்லும் சாலையில், டேம்காவா பகுதியில், சாலையோரம் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து நாகர-சம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்-பள்ளி அடுத்த பண்ணந்துாரைச் சேர்ந்தவர் பழனி-வாசன்,70. அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல்,55. இருவரும் ஹீரோ பேசன் புரோ பைக்கில், நேற்று மதியம், 1:00 மணிக்கு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவ
மனையில் இருந்து, தர்மபுரி சாலையில், குள்-ளனுார் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த மகேந்திரா தார் ஜீப் மோதியதில், சம்பவ இடத்தில் பழனிவாசன் உயிரிழந்தார். தங்கவேல் பலத்த காயமடைந்து போச்சம்பள்ளி அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். போச்சம்-பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்-றனர்.

