sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கமிஷன் பெறுவதில் தகராறு ரூ.22.50 லட்சம் பறிமுதல்

/

கமிஷன் பெறுவதில் தகராறு ரூ.22.50 லட்சம் பறிமுதல்

கமிஷன் பெறுவதில் தகராறு ரூ.22.50 லட்சம் பறிமுதல்

கமிஷன் பெறுவதில் தகராறு ரூ.22.50 லட்சம் பறிமுதல்


ADDED : ஜன 10, 2025 02:30 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், 34; பாலக்கோடு சாலையில் ஜிம் நடத்துகிறார்; ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். நேற்று காலை கருக்கன்சாவடியில் அவரது வீட்டருகே அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஹரி மற்றும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சிலம்பரசனிடம், 22.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், அதற்கான கணக்கு அவரிடம் இல்லை என்பதால், அப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் கூறியதாவது:

பறிமுதல் செய்யப்பட்டது, நிலம் விற்றதில் கிடைத்த கமிஷன் பணம் என்பது தெரிய வந்துள்ளது. அந்த பணத்துடன் வந்த சிலம்பரசனிடம், அவரின் நண்பரான கருக்கன்சாவடியைச் சேர்ந்த ஹரி, குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் சென்று, பணத்தை பறிமுதல் செய்தோம்.

வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணத்திற்கு கணக்கு காண்பித்தால், சிலம்பரசன் தரப்பினர் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us