/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்
/
அனுமதியின்றி மண் அள்ளிய 3 வாகனங்கள் பறிமுதல்
ADDED : டிச 11, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கொத்த-கொண்டப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் வாகனம் மூலம் மண்ணை தோண்டி, டிராக்டரில் கடத்தி செல்வ-தாக, ஓசூர் தாசில்தார் குணசிவாவிற்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற அவரது தலைமையிலான வருவாய்த்துறை-யினர், உரிய அனுமதியின்றி அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளிய இரு டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து, மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். வாகன உரி-மையாளர்கள், டிரைவர்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

