/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
/
டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
டிரைவர் கொலையில் மேலும் 4 பேர் கைது கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்
ADDED : ஜன 26, 2025 04:01 AM
ஓசூர்: ஓசூரில்,  டிரைவரை கொலை செய்த வழக்கில் மேலும், 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 32; டிரைவர். இவரை கடந்த, 21 இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் ஓட, ஓட விரட்டி வெட்டி கொன்றனர். இச்-சம்பவத்தில் சிவக்குமார் மனைவியின் அண்ணனான,
ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த நவீன், 33, மற்றும் வினோத்-குமார், 26, ஆகியோரை கடந்த, 23 ல், ஓசூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், கூலிப்படையினரான திருநெல்வேலி மாவட்டம், மேலபாளையத்தை சேர்ந்த சுடலை கிருஷ்ணன், 38, கிருஷ்ணாபு-ரத்தை சேர்ந்த இசக்கிமுத்து, 20,  ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 30, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்த இம்ரான்ஷா, 20, ஆகிய, 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை, ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்-தனர்.கொலைக்கான காரணம் குறித்து, போலீசார் கூறியதாவது: கொலையான சிவக்குமாருக்கு, அவரது மச்சான் நவீனின் மனைவி, சகோதரி உறவுமுறை என்ற போதும், கடந்த, 3 ஆண்டு-களாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது நவீனுக்கு ஆத்தி-ரத்தை ஏற்படுத்தியது. மேலும், தேர்ப்பேட்டையை சேர்ந்த மணி-கண்டனின் மனைவி திருமணமாகி, 7 ஆண்டுக்கு பின் கர்ப்ப-மாகி உள்ளார்.ஆனால், கொலையான சிவக்குமார், மணிகண்-டனை பொது இடத்தில் வைத்து, ஆண் பிள்ளை இல்லாத அவ-னுக்கு எப்படி குழந்தை பிறக்கும் என, மனது புண்படும் படி, தகாத வார்த்தையால் பேசியுள்ளார். இது மணிகண்டனுக்கு ஆத்-திரத்தை ஏற்படுத்தியது. அதனால் நவீன், மணிகண்டன் இரு-வரும் கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய, 2 பட்டா கத்தி, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்-டுள்ளன. இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

