sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்திய 4 லாரி பறிமுதல்

/

மண் கடத்திய 4 லாரி பறிமுதல்

மண் கடத்திய 4 லாரி பறிமுதல்

மண் கடத்திய 4 லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 19, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை, பேரிகை அடுத்த ராமச்சந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, புக்கசாகரம் வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் மாலை அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்ட் கொண்டு சென்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்து, பேரிகை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.

* மத்துார் அடுத்த, சாலுார் கிராமத்திலிருந்து சாமல்பட்டிக்கு நேற்று அதிகாலை அனுமதியன்றி செம்மண் டிம்பர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது. எஸ்.எஸ்.ஐ., மகாலிங்கம் அந்த, வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்.

* காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி வி.ஏ.ஓ., வனஜா மற்றும் அலுவலர்கள், மிட்டஹள்ளி சேரன் நகரில் நேற்று முன்தினம் நின்றிருந்த டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

*ஜெகதேவி வி.ஏ.ஓ., தீபா மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. புகார் படி பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us