/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தென்னிந்திய கராத்தே, குங்பூ போட்டி 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
/
தென்னிந்திய கராத்தே, குங்பூ போட்டி 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தென்னிந்திய கராத்தே, குங்பூ போட்டி 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
தென்னிந்திய கராத்தே, குங்பூ போட்டி 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
ADDED : ஜன 06, 2025 02:14 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், 'ஸ்கூல் ஆப் மார்சியல் ஆர்ட் டிரஸ்ட்' சார்பில், தென்னிந்திய அளவிலான கராத்தே, குங்பூ போட்டிகள் நேற்று நடந்தன. கர்நாடகா, கேரளா, தமிழகம் என, 3 மாநிலங்களில் இருந்து மொத்தம், 500க்கும் மேற்பட்டோர் பங்-கேற்றனர். 5 முதல், 30 வயதிற்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, எடை அடிப்படையில் கராத்தே, குங்பூ போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட்டன.
பெங்களூருவை சேர்ந்த, 8வது டான் பிளாக் பெல்ட் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப இயக்குனர் கியோஷி ஷிஹா-புதீன் போட்டிகளை துவக்கி வைத்தார். முதலிடம் மற்றும் இரண்-டாமிடம் பெற்ற தலா, 125 பேர், மூன்றாமிடத்திற்கு தேர்வான, 250 பேருக்கு, பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்-டன. ஏற்பாடுகளை, ஓசூரை சேர்ந்த, 5வது டான் பிளாக் தலைமை பயிற்சியாளர் ரென்சி ரோஷ்டியோஷின் செய்திருந்தார்.

