ADDED : ஆக 10, 2026 01:28 AM
அ நிறம் | அளவு
பேரிகை: ஓசூர் அடுத்த பேரிகை ஸ்டேஷன் எஸ்.ஐ., வினோத்குமார் மற்றும் போலீசார், சூளகுண்டா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள வனத்தையொட்டி, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள், பணம் வைத்து சூதாட்-டத்தில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது வாக-னத்தை விட்டு தப்பியோடினர்.
கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட, 4 பைக்குகள் மற்றும் தமிழக பதிவு எண் கொண்ட இரு பைக்குகளை போலீசார் பறி-முதல் செய்தனர். தப்பியோடிய, கர்நாடகா மாநிலம், அனிகிரி-ஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் உட்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.
