ADDED : அக் 13, 2025 02:08 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியை சேர்ந்த, 16 வயது சிறுவன். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பள்ளி நிர்-வாகம் பெற்றோர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதனால் பயந்த மாணவன் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்று மாயமானார். அவரது தாய் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கஸ்-துாரி, 39. கடந்த, 7ம் தேதி காலை, 9:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது கணவர் புகார் படி, ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.பேரிகை அருகே தாண்டரப்-பள்ளியை சேர்ந்த மஞ்சுநாத், 48. இவரது மனைவி சாந்தி, 45. இவர்களுக்கும், அவர்களது மகன் ஹரிஷ்குமார், 25, என்பவ-ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கடந்த, 8ம் தேதி காலை வீட்டிலிருந்து சென்ற மஞ்சுநாத் மற்றும் சாந்தி மாயமா-கினர். மகன் புகார் படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.ஊத்தங்கரை அருகே, பாப்பனுாரை சேர்ந்த அய்யனார் மனைவி ரேவதி, 27. கடந்த, 9ம் தேதி இரவு, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. கணவர் புகார் படி, ஊத்தங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே, கதவணையை சேர்ந்த தர்மலிங்கம் மனைவி பிரியா, 28. கூலித்தொழிலாளி; கடந்த, 8ம் தேதி மாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது தந்தை முருகன், 61, புகார் படி, ஊத்தங்கரை
போலீசார் விசாரிக்கின்றனர்.