sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா

/

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா


ADDED : நவ 15, 2024 02:26 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு

பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி, நவ. 15-

ஓசூர், பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தின விழா மற்றும் பள்ளிக்கு, பெற்றோர் கல்வி சீர் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பொன் நாகேஷ் தலைமை வகித்தார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ் மற்றும் மாநகராட்சி, 3வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் ரஜினி ஆகியோர் விழாவை துவக்கி வைத்தனர். பெற்றோர், பள்ளிக்கு தேவையான உபகரணங்கள், நோட்டு, புத்தகங்கள், துாய்மை பணிக்கு தேவையான பொருட்கள், பழங்கள் போன்ற, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, பேடரப்பள்ளி பகுதியில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று, தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

தொடர்ந்து, பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வில் முதலிடம் பெற்ற, 42 மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின், மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், அன்னையா, ராஜி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் குமரவேல், ஆசிரியர் பயிற்றுனர் காயத்ரி, பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் லக்கப்பா, செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us