sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிராமத்திற்குள் ஒற்றை யானை

/

கிராமத்திற்குள் ஒற்றை யானை

கிராமத்திற்குள் ஒற்றை யானை

கிராமத்திற்குள் ஒற்றை யானை


ADDED : ஜூலை 16, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆலஹள்ளி காப்புக்காட்டில், 4 யானைகள் தனித்தனியாக முகாமிட்டுள்ளன. இரவில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 4 யானைகளும் தனித்தனியாக ஆலஹள்ளி காப்புக்காட்டில் இருந்து வெளியேறின.

கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை, விவசாயிகள் விரட்டிய நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணி மற்றும், 5:30 மணிக்கு, மீண்டும் ஒற்றை யானை வந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்து வீடுகளில் தஞ்சமடைந்தனர். கிராம சாலையில் ஹாயாக ஒற்றை யானை நடந்து சென்றது. மக்கள் வீடுகளுக்குள் இருந்தவாறு சத்தம் போட்டனர். கிரியனப்பள்ளி, மணியம்பாடி, ஆலஹள்ளி ஆகிய பகுதிகளில், தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் தோட்டத்தை தனித்தனியாக சென்று சேதப்படுத்திய யானைகள், நேற்று காலை வனப்பகுதி நோக்கி சென்றன.






      Dinamalar
      Follow us