ADDED : மே 09, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தினமும் நீர்மோர், வெள்ளரி, பானகம், தர்ப்பூசணி போன்றவை வழங்கப்படுகின்றன.
ஓசூர் மாநகராட்சி, 8வது வார்டு வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், பகுதி செயலாளர்கள் அசோகா, ராஜி, முன்னாள் மாநகர செயலாளர் பால்நாராயணன், கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் ஆகியோர், பொதுமக்களுக்கு நேற்று நீர்மோர், பானகம், தர்ப்பூசணி போன்றவற்றை வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர் குமார், முன்னாள் கவுன்சிலர் நாராயணரெட்டி, நிர்வாகிகள் பாலுசாமி, பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.