/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 10, 2025 01:58 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, போச்சம்பள்ளி வடக்கு ஒன்றியம், அரசம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில், அகரம், குடிமேனஹள்ளி, வாடமங்கலம், பாப்பாரப்பட்டி, பண்ணந்துார், அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பஞ்.,களுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும், அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட நல திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிக்க, பூத் நிர்வாகிகளிடம் தெளிவாக எடுத்து கூறப்பட்டது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்ச்செல்வம் மற்றும் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திருமால், மாதையன், அண்ணாதுரை உள்ளிட்ட மாவட்ட மற்றும் ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

