ADDED : ஏப் 24, 2026 05:54 AM
கிருஷ்ணகிரி: “அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வென்று, இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமைக்கும்,” என, முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா சாலையிலுள்ள அரசு துவக்கப்பள்-ளியில் நேற்று, அ.தி.மு.க., துணை பொதுச்செய-லாளரும், வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளரு-மான முனுசாமி எம்.எல்.ஏ., தன் குடும்பத்தின-ருடன் வந்து ஓட்டளித்தார்.அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல், இன்று நடப்பதை-யொட்டி, நான் என் ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., தலைமையிலான கட்சிகள் வெற்றி பெறும். அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும்.
இ.பி.எஸ்., இரண்டாவது முறையாக முதல்வர் ஆவார். தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை சரியாகவே செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்-டத்தை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒரு இணக்கமாக எந்த பதற்றமுமின்றி தேர்லை சந்திக்கும். தற்போதும் அப்படித்தான் நடக்கிறது. மலை கிராமங்களில் கூட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
