ADDED : ஜன 04, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, சாரகப்-பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணியாற்றி வந்தவர் நல்லாகவுண்டன்; இவர் மாவட்ட மாறுதல் மூலம், சேலம் மாவட்டத்திற்கு இட-மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாரகப்பள்ளி கிராமத்தில் இவர் பணியாற்றிய போது, மக்களிடம் இயல்பாக பழகி, அரசின் திட்-டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்ததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, வி.ஏ.ஓ., நல்லாகவுண்டனுக்கு பாராட்டு விழா நடத்-தினர். அவருக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

