sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது

/

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருடியவர் கைது


ADDED : ஜன 07, 2024 10:47 AM

Google News

ADDED : ஜன 07, 2024 10:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் மாரப்பன், விவசாயி. இவர், கடந்த, 2023 டிச., 14ல் குடும்பத்துடன் வெளியே சென்ற சமயத்தில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து, 14.5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

மகாராஜகடை போலீசார் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையில், தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும், கைரேகை நிபுணர்களின் தடயங்கள் மற்றும் அப்பகுதி, 'சிசிடிவி' காட்சிகள் பதிவின்படி, திருட்டில் ஈடுபட்டது கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த பிரசாந்த், 23, என தெரிந்தது. அவர் மீது, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்பட, 4 போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு

வழக்குகள் உள்ளதும் தெரிந்தது.

நேற்று மாலை, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் சுற்றித்திரிந்த பிரசாந்தை, தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்தனர். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரியில் பல்வேறு வீடுகளை குறிவைத்து திருட்டு

சம்பவங்களில் ஈடுபட

திட்டமிட்டது தெரிந்தது.






      Dinamalar
      Follow us