ADDED : அக் 06, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் முத்து மகன் இமானுவேல், 19. தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 2ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய சிறுவர் பூங்-காவில், தனது அண்ணன் சாமுவேல், 22, என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத, 4 பேர் கொண்ட கும்பல், தாமாக முன்வந்து இமானுவேலுவுடன் தகராறு செய்து, அவரை தகாத வார்த்தையால் திட்டி கையால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது அண்ணன் சாமுவேல் புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.