/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'
/
வீடு புகுந்து நகை திருடிய 2 பேருக்கு 'காப்பு'
ADDED : பிப் 11, 2025 07:03 AM
ஓசூர்: ஓசூர் அருகே, அச்செட்டிப்பள்ளி பிக் அவுட் பாரடைஸ் லே அவுட்டை சேர்ந்தவர் மேகநாதன். இவர் மனைவி விஜயா, 34. கடந்த மாதம், 15 அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, தன் கணவருடன், பெங்களூரு சென்று விட்டார். அடுத்த நாள் காலையில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு
உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 2.40 லட்சம் ரூபாய் மதிப்-புள்ள, 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது.விஜயா புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்தனர். இதில், ஊத்-தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே,
மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த ராஜதுரை, 19, பாலா அபிஷேக், 19, ஆகிய இருவர், திருட்டில்
ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் நேற்று முன்-தினம் போலீசார் கைது செய்தனர்.

