ADDED : டிச 14, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
ஓசூர், டிச. 14-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தோரிப்பள்ளி பஞ்., க்கு உட்பட்ட உங்கட்டி, நீலவங்கா கிராமங்களில், பல்நோக்கு கட்டடம், கழிவு நீர் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்க, நிதிக்குழு மானிய திட்டத்தில், 20.02 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். பி.டி.ஓ., உமாசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.