ADDED : மார் 14, 2024 06:47 AM
அ நிறம் | அளவு
ஓசூர் : சூளகிரியில் மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா நடந்தது.
மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், இளைஞரணி பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய, 50க்கும் மேற்பட்டோர், பா.ஜ., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் அன்பரசன், சட்டசபை இணை பொறுப்பாளர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் லட்சுமிபதி, இளைஞரணி மாவட்ட தலைவர் வீரேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
