நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த, பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் சூர்யா உள்ளிட்ட, பா.ஜ.,வினர் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்-சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதலில் காய-மடைந்த சூர்யா மற்றும் பா.ஜ.,வினர், அரசு மருத்-துவமனையில் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவத்தை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று மாலை, பா.ஜ., இளைஞரணி சார்பில், மாவட்ட தலைவர் மகேஸ்ரெட்டி தலை-மையில், தி.மு.க.,வினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செய-லாளர் கிஷோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

