sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

/

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்

பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 07, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கோவை, சட்டக்கல்லுாரி மாணவியை கடந்த, 2ம் தேதி இரவு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து, ஒருங்கிணைந்த பா.ஜ., மகளிரணி சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி சிலம்பொலி, மேற்கு மாவட்ட மகளிரணி தலைவி முத்துலட்சுமி ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.இதில், தேசிய பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகாமி பரமசிவம் பேசியதாவது: கோவை சட்டக்கல்லுாரி மாணவி, பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், பெண்கள் விடுதி குளியறையில் ரகசிய கேமரா வைத்து, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின், 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், பெண்களின் அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழக அரசின் மெத்தன போக்கால் பெண்ணினமே சீரழிகிறது. பாலியல் சீண்டல்களை தடுக்க வேண்டும். பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் விமலா வரவேற்றார். கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் சரண்யா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us