ADDED : பிப் 02, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்சோவில் சிறுவன் கைது
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்; கடந்த மாதம், 26 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், ராயக்கோட்டையை சேர்ந்த, 18 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரணையில், மாணவியை சிறுவன் கடத்தியது தெரிந்தது. மாணவியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சேலம் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் நேற்று முன்தினம் அடைத்தனர்.