ADDED : ஜூன் 02, 2025 03:32 AM
ஊத்தங்கரை: தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம், ஊத்தங்கரை கிளையின் மாதாந்-திர கூட்டம், ஊத்தங்கரை ஆஞ்சநேய ஸ்வாமி மணிமண்ட-பத்தில் நேற்று நடந்தது. தலைவர் சுப்பு ஐயர் தலைமை வகித்தார். செயலாளர் சிவசுப்பிரமணிய சிவம், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், சீனிவாசன், பாலாஜி ராம், விஷ்ணு பிரியன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளாளர் மணிகண்டன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில், மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட கோவை சிஜிவி கணேச-னுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொது தேர்வில் சாதனை படைத்த கோபாலகிருஷ்ணன் - அனு தம்பதியரின் மகள் தேசிகாவிற்கு, ஊக்கத்தொகை, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள் கற்றுத்தர சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்தும், சங்க வளர்ச்சி பணிகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. சேஷாத்ரி ராம், வாசுதேவன், அனு உள்பட பலருர் பங்கேற்றனர். விஷ்ணு பிரியன் நன்றி கூறினார்.