/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 02, 2024 11:56 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில், உலக தாய்ப்பால் வார விழாவை-யொட்டி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செவிலியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்-புணர்வு பேரணி நேற்று நடந்தது.
மகப்பேறு மருத்துவர்கள் கவிதா செந்தில், வனிதா பிரதீப்குமார், ஸ்ரீசுதா விஜி ஆகியோர், பேரணியை துவக்கி வைத்தனர். குணம் மருத்துவமனை முன் துவங்கிய பேரணி, தேன்கனிக்கோட்டை சாலை, பழைய தொலைதொடர்பு அலுவலக சாலை உட்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் மருத்துவ-மனை முன் நிறைவு பெற்றது.பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள் மற்றும் மாணவ, மாண-வியர், குழந்தைக்கு கண்டிப்பாக முதல், 6 மாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். புட்டிபால் கொடுக்க கூடாது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள், தாய்ப்-பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.