நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் அடுத்த, குட்டூர் கிராமத்தில், 2ம் ஆண்டு கன்று விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கன்றுகள் கொண்டு வரப்பட்டன.
இவைகளில் குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் கன்றுகளுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதில், முதல் பரிசு, 75,000 ரூபாய், 2ம் பரிசு, 60,000 ரூபாய், 3ம் பரிசு, 50,000 ரூபாய் என, 49 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்துார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.