ADDED : பிப் 19, 2025 01:17 AM
அ நிறம் | அளவு
உடல் பாகங்கள் துண்டாகிலேத் தொழிலாளி உயிரிழப்பு
ஓசூர்:திருப்பத்துார் மாவட்டம், நன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 31. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவனங்களுக்கு, ஜாப் ஒர்க் செய்து கொடுக்கும் சிறிய அளவிலான லேத் பட்டறையில் பணியாற்றி வந்தார்; நேற்று மதியம் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவரது உடை மிஷினில்
சிக்கியது. இதனால் அவரும் மிஷினில் சிக்கி கொண்டார். அவரை காப்பாற்ற மற்ற ஊழியர்கள் முயன்ற நிலையில், உடல் பாகங்கள் பல்வேறு துண்டுகளாகி, சம்பவ இடத்திலேயே பழனி உயிரிழந்தார். சிப்காட் போலீசார்
விசாரிக்கின்றனர்.
