/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு
/
வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 16, 2025 03:17 AM
பெருந்துறை: பெருந்துறையில் உரிய ஆவணம் மற்றும் அனுமதியின்றி தங்கி, கார்மெண்ட்டில் வேலை செய்த, பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள், 11 பேரை, பெருந்துறை போலீசார் நேற்று விசா-ரணைக்கு அழைத்து சென்றனர்.
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சத்ஹிரா, காளிகாஞ் பகுதி அன்சூர் ரகுமான் மிஸ்ரா, 53, அனுசூல் மெஸ்தர், 49; கரீஷ்-மாகாஞ் ரீதாய், 27; ராங்கபாலி, காசிகண்டா பைஜித், 24; முகுதர் ஹானிபூர் சுமன், 28; சோனார்கான் பகுதி அல்மஞ்சுன், 43; காசிபூர் மோனீர், 57; கிஷோர்காஞ் பகுதி மொகபட், 42; நாதல் பகுதி சர்தார், 23, அப்துல் கலாம், 46, இவர் மனைவி ஷாகான்ரா காடூன், 38, ஆகியோர், பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகு-தியில் தங்கி, கார்மெண்ட்ஸ் கம்பெனிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக, பெருந்துறை போலீசார் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்-ளனர்.

