/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொண்டையில் நிலக்கடலை சிக்கியதால் குழந்தை பலி
/
தொண்டையில் நிலக்கடலை சிக்கியதால் குழந்தை பலி
ADDED : ஜூலை 25, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த போடம்பட்டி இருளர் காலனியை சேர்ந்தவர் மதன். இவரது ஒன்றரை வயது மகள் ருஜிதா. நேற்று முன்தினம் மாலை குழந்தை ருஜிதா நிலக்கடலையை சாப்பிட்டபோது, தொண்டையில் கடலை சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து குழந்தையை சிகிச்சை க்கு ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்து விட்டது. ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ராஜேஸ்வரி புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.