sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்

/

சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்

சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்

சாலை அமைக்க எதிர்ப்பு கலெக்டர் உத்தரவால் ஜரூர்


ADDED : நவ 01, 2025 12:55 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசகவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட கூச்சானுார் மோட்டூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மண் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், பட்டா நிலத்தில் உள்ளது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தார்.கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையில், சம்பந்தப்பட்ட இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால், சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதை கண்டித்து, கடந்த, 27-ல் தனி நபர் குடும்பத்தார், சாலை மறியல் செய்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, நேற்று மீண்டும் கூச்சானுார் மோட்டூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us