/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றிஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றிஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றிஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றிஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 23, 2025 01:21 AM
காரிமங்கலம்:காரிமங்கலம் ஒன்றியம், கோவிலுார் பஞ்., ல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்.,ல் நடந்த தேசிய வருவாய் திறன் படிப்பு உதவி (என்.எம்.எம்.எஸ்) தேர்வு முடிவுகள் கடந்த ஏப்., 12ல் வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில், 387 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில், 5ம் இடம் பெற்றனர். இதில், கோவிலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் தேர்வெழுதிய, 19 மாணவர்களில், 8 மாணவியர் ஒரு மாணவன் என, 9 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதில், தர்மபுரி மாவட்ட அளவில், தர்மபுரி டவுன் அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், கோவிலுார் அரசு நடுநிலைப்பள்ளி மாவட்ட அளவில், 2ம் இடமும் ஒன்றிய அளவில் முதலிடம் பிடித்தது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
நேற்று, தலைமை ஆசிரியர் மனோன்மணி, சக இருபால் ஆசிரியர்கள் மற்றும் கிராம வளர்ச்சி குழு உறுப்பினர் நந்திசிவன், முன்னாள் பஞ்., தலைவர் குப்புசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் மாணவர்களை பாராட்டினர்.

