ADDED : மே 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெலமங்கலம், ஓசூர், பாகலுார் சாலை என்.ஜி.ஜி.ஓ.எஸ்., காலனியை சேர்ந்தவர் தனஞ்செயன், 59. கெலமங்கலம் அருகே டி.தம்மண்டரப்பள்ளியில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இந்த நிறுவனத்தில், தேன்கனிக்கோட்டை அடுத்த அலசெட்டியை சேர்ந்த முனிராஜ், 24, என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு, கம்பெனியில் இருந்த, 52,000 ரூபாய் மதிப்புள்ள, 51 கிலோ காப்பர் ஒயரை முனிராஜ் திருடியதாக, மேலாளர் தனஞ்செயன் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, முனிராஜை கைது செய்தனர்.