/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
/
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.5.23 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
ADDED : ஜூலை 03, 2025 01:10 AM
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளியில், இ-நாம் முறையில் நடந்த ஏலத்தில், 5.23 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போனது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 2,252 கிலோ கொப்பரை தேங்காய்கள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், 253.99 ரூபாய், குறைந்தபட்சம், 185.99 ரூபாய், சராசரியாக கிலோ ஒன்றுக்கு, 247.11 ரூபாய் என மொத்தம், 5.23 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இது குறித்து, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) முறையில், விவசாய விளைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர். கொப்பரை தேங்காய்கள் நல்ல விலைக்கு போனது.விற்பனை செய்யப்பட்ட தொகைகள் உடனே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன. மேலும், கொப்பரை, பருத்தி மட்டுமின்றி நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடப்பதால், நெல் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.