sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானைகளால் பயிர்கள் நாசம்

/

யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்


ADDED : டிச 09, 2024 07:40 AM

Google News

ADDED : டிச 09, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்பிளாட் பகுதியில் முகாமிட்டிருந்த, 25க்கும் மேற்பட்ட யானைகளை, நேற்று முன்தினம் ஜவளகிரி நோக்கி வனத்துறையினர் விரட்டி சென்றனர். அப்போது, தின்னுார் கிராமத்திற்குள் சென்ற யானைகள், விவசாயிகள் பிரகாஷ், ரவி, கிருஷ்ணாரெட்டி ஆகியோரது விவசாய நிலங்களுக்குள் புகுந்து, ராகி, சோளம், துவரை, பீன்ஸ், தக்காளி பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன.

பின்னர் அங்கிருந்து வனப்பகுதி நோக்கி சென்றன. நொகனுார் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 4 யானைகள் உச்சனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து, பாப்பண்ணா, சென்னீரப்பா, நாகப்பா, பாலு, சிவராஜ் ஆகியோரது நிலங்களில், சாகுபடி செய்திருந்த, ராகி, சோள பயிர்களை சேதப்படுத்தின. யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உரிய இழப்பீடு வழங்குவதுடன், யானைகளை கர்நாடகாவிற்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us