sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சூதாட்டம்; 34 பேர் கைது

/

சூதாட்டம்; 34 பேர் கைது

சூதாட்டம்; 34 பேர் கைது

சூதாட்டம்; 34 பேர் கைது


ADDED : ஆக 22, 2011 01:46 AM

Google News

ADDED : ஆக 22, 2011 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டாடிய, 34 பேரை ஒரே நாளில் போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., கண்ணன் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் போலீஸார் பணம் வைத்து, சீட்டாடுபவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., உமாசங்கர் தலைமையிலான போலீஸார், பழையபேட்டை சுடுகாடு அருகே ரோந்து சென்ற போது, அங்கு பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த பிரதாப்(29), நிசார்(35), இப்ராகிம்(50) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

பர்கூர் எஸ்.ஐ., கோவிந்தசாமி மற்றும் போலீஸார் துரைஸ் தியேட்டர் பகுதியில் ரோந்து சென்ற போது, அங்கு சீட்டாடி கொண்டிருந்த கோபி(20), செல்வராஜ்(35), ஏழுமலை(35) ஆகியோரை கைது செய்தனர். இதே போல் ஓசூர் அட்கோ, சூளகிரி, வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, கந்திகுப்பம், காவேரிப்பட்டணம், பாகலூர், ஆகிய போலீஸ் ஸ்டேசன்களுக்கு உட்பட்ட பகுதியில் போலீஸார் ரோந்து சென்று பணம் வைத்து சீட்டாடி கொண்டிருந்த மொத்தம், 34 பேரை ஒரே நாளில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us