/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 03, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. அதையடுத்து, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு நேற்று காலை மாணவ, மாணவியர் வந்தனர்.
அவர்களுக்கு இலவச சீருடைகள் மற்றும் பாட புத்தகங்களை அரூர், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தென்னரசு வழங்கினார். இதில், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.