sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா

/

பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா

பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா

பொ.மல்லாபுரத்தில் பயன்பாட்டுக்கு வராத பூங்கா


ADDED : மே 07, 2025 01:40 AM

Google News

ADDED : மே 07, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி:தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் தர்மபுரி மெயின் ரோடு, ஆர்.எம்.ரோடு, வினோபாஜி தெரு, பில்பருத்தி, உள்ளிட்ட 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தர்மபுரி மெயின் ரோடு, தனியார் நுாற்பாலை அருகில், 2023 -24 ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், அம்ருத் 2.0 திட்டத்தில், 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

பூங்கா அமைக்கும் பணி முடிவடைந்து, திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கு ஒரே பொழுது போக்கு உள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழும் வகையில், ஏணி, ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, ஓய்வு இருக்கைகள் கழிவறை உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. சிறுவர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us