/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது
/
வி.ஏ.ஓ., ஆபீசில் புகுந்து ரகளை போதை ஆசாமி கைது
ADDED : பிப் 01, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், கல்லாவி அடுத்த பெரியகோட்ட-குளம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்,27; கூலித்தொழி-லாளி. இவர், நேற்று முன்தினம் குடிபோதையில் பெரியகோட்ட-குளம் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த வி.ஏ.ஓ., இளம்பருதி மற்றும் அவரது உதவியாளர் தெய்வசிகாமணி, 53, ஆகியோரிடம் தகராறில் ஈடு-பட்டு, அலுவலகத்திலிருந்த சேர், பீரோ உள்ளிட்டவற்றை அடித்து உடைத்துள்ளார்.
தடுக்க வந்த இருவரையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வி.ஏ.ஓ., இளம்பருதி, கல்லாவி போலீசில் அளித்த புகார் படி அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.