/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மனைவியை குத்தி கொன்ற 'போதை' கணவர் கைது
/
மனைவியை குத்தி கொன்ற 'போதை' கணவர் கைது
ADDED : ஜூலை 13, 2024 12:44 AM
காரிப்பட்டி: சேலம், சுக்கம்பட்டியை சேர்ந்த, கட்டட மேஸ்திரி சுரேஷ், 37.
இவரது மனைவி இந்துமதி, 32. கொத்து வேலை தொழிலாளி-யாக பணிபுரிந்தார். இவர்களுக்கு, 13 ஆண்டுகளுக்கு முன் திரும-ணமாகி, இந்துமதியின் தந்தை ஊரான, அயோத்தியாப்பட்டணம், ராம் நகரில் வசித்தனர். இவர்களது மகன் வேல்முருகன், 12. நேற்று காலை, 6:30 மணிக்கு இந்துமதி வயிற்றில் கத்தியால் குத்தி, சுரேஷ் கொலை செய்தார். இதுகுறித்து அப்பகுதியினர் தக-வல்படி, காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி, சுரேஷை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இந்துமதி நடத்தை மீது சந்தேகப்பட்ட சுரேஷ், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு இந்துமதியை, அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்து, அருகே உள்ள வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை இந்துமதி எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மது போதையில் இருந்த சுரேஷ், கத்தியால் இந்துமதி வயிற்றில் குத்தினார். இதில் அவர் உயிரி-ழந்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.