ADDED : அக் 14, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பிரசன்ன பார்வதி சமேத சந்திரம-வுலீஸ்வரர் கோவிலில், ஹிந்து முன்னணி சார்பில், ஆயுத பூஜை-யையொட்டி கடந்த, 3ல் துர்க்கையம்மன் சிலையை வைத்து, 9 நாட்களும் மாலையில் பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடந்து வந்தன.
நிறைவு விழாவான நேற்று, துர்கையம்மன் சிலையை தேரில் வைத்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி தலை-மையில், ராசுவீதி, சப் - ஜெயில் சாலை வழியாக ஊர்வலமாக சென்று, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீரில் கரைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.