sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்

/

அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்

அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்

அறுந்து விழுந்த மின்கம்பியால் 20 வீடுகளில் பொருட்கள் நாசம்


ADDED : ஜூலை 22, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, சிப்காட், அரச மரம் பஸ் ஸ்டாப் அருகே, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த மின்சார கம்பி அறுந்து, வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் ஒயர் மீது விழுந்தது.

இதனால் உயர் மின்னழுத்த கம்பியில் சென்ற மின்சாரம், அப்படியே வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் சென்றதால், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வாஷிங் மெசின், டி.வி., பிரிட்ஜ், மின்மோட்டார்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. அதே பகுதியிலுள்ள இண்டிகோ ஏ.டி.எம்.,ல் இருந்த மூன்று பேட்டரிகள் எரிந்தன. ஆனால், அதிலிருந்த, 9 லட்சம் ரூபாய் தப்பியது.

போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us