ADDED : ஏப் 19, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி புதுாரை சேர்ந்தவர் வேடியப்பன், 70, விவசாயி; இவர், நேற்று காலை, 11:30 மணிக்கு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துள்ளார்
. அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேடியப்பன் மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். புகார் படி, அரூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
