/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு
/
இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு
இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு
இயந்திரம் விழுந்து விவசாயி காயம் பஞ்., தலைவர், அதிகாரி மீது வழக்கு
ADDED : ஜன 04, 2025 07:16 AM
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி பஞ்.,க்குட்பட்ட, கதி-ரிபுரத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமையவுள்ளது. இதற்காக கடந்த, 29ல், தர்மபுரி மண் பரிசோ-தனை துறை உதவி பேராசிரியர் சத்யபிரியா, உதவி பொறியாளர் ஜென்சி ஆகியோர் தலைமையில் மண் பரிசோதனை செய்துள்-ளனர்.
அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது இயந்திரத்தை நிலைநி-றுத்தும் போது, தவறி கோவிந்தசாமியின் கால், கழுத்து பகுதியில் விழுந்துள்ளது. படுகாயமடைந்த அவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவிந்தசாமி மனைவி முத்துலட்சுமி அளித்த புகார்படி, அலட்சி-யமாக பணிபுரிந்த அரசு அதிகாரிகள் மற்றும்
மிட்டஹள்ளி பஞ்., தலைவர் காவேரி உள்ளிட்டோர் மீது, காவே-ரிப்பட்டணம் போலீசார் வழக்கு
பதிந்து விசாரிக்கின்றனர்.

